-->

2017-12-12

சனி பெயர்ச்சி பலன்கள் ரிஷப ராசி 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ரிஷப ராசி 2017 - 2020

Sani Peyarchi Palangal Rishaba Rasi

=========

திருக்கணிதப்படி :

==================
கடந்த தை மாதம் 13 (26.01.2017) வியாழக்கிழமை இரவு 7:31 க்கு ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து அதிசாரமாக பெயர்ச்சி ஆகி தனுசு ராசிக்கு சென்றார் பின் வக்கிர கதியில் வந்து ஆனி 6 ( 20.06.2017 ) செவ்வாய்கிழமை மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்தார்
தற்போது மீண்டும் ஐப்பசி 9 (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 3:28 க்கு நேர்கதியில் விருச்சிக ராசியில் முழுவதுமாக பெயர்ச்சியாகி விட்டார்.

வாக்கியப்படி :

============
வரும் மார்கழி 4 (19.12.2017) செவ்வாய்க்கிழமை 8:52 நாழிகை அளவில் ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்
இதுவரை கடந்த இரண்டரரை வருட காலத்தில் உங்கள் ராசிக்கு 7 மிடத்தில் கண்டச் சனியாக இருந்து கணவன் மனைவி பிரிவு, விவாகரத்து, வாக்குவாதம், குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழல், திருமண தடை, நண்பர் பொதுமக்கள் விரோதம், வரவுக்கு மேல் செலவுகள், கூட்டாளி பகை, உறவில் பகை, வண்டி வாகன செலவுகள், மாடு கன்றுகளுக்கு நோய் நொடிகளில் இழப்பு, தாய் உடல்நிலை பாதிப்பு இழப்பு, அகல கால் வைத்து அவஸ்தை இப்படி பல வகையில் பிரச்சினைகளை சந்தித்து இருப்பீர்கள்
இனி சனிபகவான் அடுத்து உங்கள் அட்டம ஸ்தானம் எனப்படும் எட்டாமிடக்கு பெயர்ச்சியாகி 3,7,10 ஆம் பார்வையாக 10, 2. 5 ஆகிய இடங்களை பார்க்க உள்ளது இனி ஏற்கனவே சந்தித்த பிரச்சினைகளை காட்டிலும் கூடுதலாக பிரச்சினைகளை சந்திக்க உள்ளீர்கள் எனவே எல்லாவற்றையும் ஆராய்ந்து முடிவெடுப்பது பல பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்
இனி உங்களுக்கு அடுத்த இரண்டு வருடம் அட்டம சனியாக இருந்து பல கெடு பலன்களை தரவுள்ளார் உடல்நல பிரச்சினை,வைத்திய செலவுகள், தொழில் பிரச்சினைகள், துக்க செய்திகள், கோபதாபங்கள், விரோதங்கள், அவமானம், பெற்றோர்களுடன் மனக்கசப்பு, பொருள் களவு, தீ விபத்து, சிறை வாசம், வேலை இழப்பு இப்படி பல

உடல் ஆரோக்கியம் :

======================
அடுத்த இரண்டு ஆண்டுகளில் நோய் நொடிகளுக்கு கொண்டட்டாமான காலம் உடல்நலத்தில் கவனம் அதிகம் செலுத்த வேண்டிய காலம் ஆகும், திடீர் திடீர் மருத்துவ செலவுகள், விபத்து, அறுவை சிகிச்சை, நோய் வழி கண்டம், நெருங்கிய உறவினர்களின் மரண செய்திகள், மர்ம உறுப்பில் பிரச்சினைகள் உண்டாகும், உடல்உறவில் பிரச்சினைகள் தோன்றும், தகாத உடல்உறவு முறையை தவிர்க்க வேண்டிய கால கட்டம் மீறினால் கடும் உடல் நல பாதிப்பு / நோய் உண்டாகும்.

பரிகாரம் :

தன்வந்தரி பகவானுக்கு அர்ச்சனை வழிபாடு அடிக்கடி செய்ய சிறப்பு, தினமும் காகத்துக்கு பழைய சாதம் வைக்க வேண்டும், மெடிக்கல் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து வைத்து கொள்ள நலம், உடல் மன நலத்தை பேன வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும், யோக செய்ய சிறப்பு, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குடும்ப உறுப்பினர்களுக்கும் எடுத்து கொள்ள சிறப்பு

உத்தியோகம் / வருமானம் :

==========================
உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு கூடும், இடமாற்றம், பணி மாற்றம், சம்பள குறைப்பு, மேலதிகாரியின் கெடுபிடி, மெமோ தருவார்கள், ஊர் மாற்றம், உழைப்புகேற்ற மதிப்பு, ஊதியம் கிடைக்காது, வேலை இழப்பு உண்டாகும், கதவடைப்பு, வெளிநாட்டுக்கு விருப்பாத இடமாற்றம், ஊதிய உயர்வு தடை, கொடுத்திருந்த சலுகைகள் பறிப்பு, புதிய வேலை வாய்ப்பு அமைவதில் சிக்கல், புதிதாக போன இடத்தில் திடீர் நிறுத்தம் உண்டாகும் எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.

பரிகாரம் :

சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு, புதன்கிழமை நெய்விளக்கிட்டு பெருமாள், மகாலட்சுமி வழிபாடு

தொழில் / வியாபாரம் / வருமானம் :

======================================
தொழில் / வியாபாரம் மந்த நிலை சந்திக்கும் காலம், தொழில் நின்று விடும் அல்லது பல தொல்லைகள் சந்திக்கும், விருத்தி செய்ய முடியாது, விரிவாக்கம் செய்வது, அகல கால் வைப்பது போன்றவற்றை நிறுத்தி வைக்க சிறப்பு, பல தர்ப்பினரரின் கோப தாபங்களுக்கு ஆளாக நேரிடும், கூட்டாளியுடன் பிரச்சினை, மனஸ்தாபம் உண்டாகும், வருமானம் மிகவும் பாதிக்கப்படும் காலம், பாக்கி வரவுகள் நின்று விடும், வசூல் ஆவதில் சிக்கல் உண்டாகும், பெரிய முதலீடுகள் தவிர்ப்பது உத்தமம், உற்பத்தி செய்த பொருள் தேக்கம் உண்டாகும், தொழிலாளர்கள் பிரச்சினை ஓங்கும், பொருள் களவு, தீ விபத்து, தொட்டதெல்லாம் தோல்வி, அரசு அதிகாரிகளின் மிரட்டல், அரசின் வரி பிரச்சினைகளை சரி செய்து கொள்ளவேண்டிய காலம்

பரிகாரம் :

சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு, புதன்கிழமை நெய்விளக்கிட்டு பெருமாள், மகாலட்சுமி வழிபாடு

பெண்கள் :

==========
இளம்பெண்களுக்கு திருமணம் தடைபடும், கணவருடன் பிரிவினை, சண்டை சச்சரவு, விவாகரத்து, கோபதாபம் உண்டாகும். புதிய தொழிலில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். தனியார் நிதி நிறுவனத்தில் பணத்தை போட வேண்டாம். கொடுக்கல் வாங்கலை தற்காலம் தவிர்க்க சிறப்பு, பொன் நகை ஆபரணங்கள் அடகுக்கு போகும், சிலருக்கு களவும் போகும், அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது சிறப்பு, அடுத்தவருக்கு கியாரண்டி கொடுக்க கூடாது, மர்ம ஸ்தான பிரச்சினைகள் உண்டாகும்,

அரசியல்வாதிகள் :

===================
மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம், பதவி பறிப்பு, பதவி இறக்கம், பணப் பிரச்சினைகளில் சிக்க வேண்டிவரும், பணம் பறிபோகும், தலைவர்களின் அதிருப்ப்திக்கு ஆளாக நேரிடும், உங்களுக்கு கீழே இருந்தவர்கள் உங்களை ஏமாற்றி அவர்கள் பதவி அடைய கூடும், கட்சியில் அவமானம், கவுரவம் இழக்க நேரிடும், புதிய கட்சியில் சேர்த்து உங்கள் நேரம் பணம் கவுரவம் இழப்பு உண்டாகும். அரசியலால் எல்லாம் இழக்கும் காலம் எனவே கவனமுடன் இருக்க வேண்டிய கால கட்டம்

பரிகாரம் :

அடிக்கடி திருச்செந்தூர் கடலில் குளித்து முருகனுக்கு பால் அபிசேகம் செய்து வழிபாடு செய்ய சிறப்பு, ஏழை மாற்று திறனளிக்கு உதவிகள் செய்ய, சனீஸ்வரன் அர்ச்சனை வழிபாடு சனிக்கிழமைகளில் செய்ய சிறப்பு

விவசாயிகள் :

==============
விவாசாயம் முடங்கும் காலம், பூச்சி தொல்லைகள் அதிகரித்து கடைசி நேரத்தில் விளைச்சல் கெடும், விலை போகாது, வாங்கிய கடன் கட்ட நெருக்கடி உண்டாகும், நிலம் கைவிட்டு போகும் சூழல் உண்டாகும், காலசூழலால் பயிரில் பாதிப்புகள் அதிகரிக்கும், தீ விபத்து வயலில் உண்டாகும், கொள்ளை போகும், புதிய வகை பயிர்கள் இடுவதை தவிர்க்கவும்

பரிகாரம் :

குலதெய்வ வழிபாடு, புதன் தோறும் பெருமாள் வழிபாடு, சனிக்கிழமை சனீஸ்வரன் நல்லெண்ணெய் தீப வழிபாடு

மாணவ மாணவியர்கள் :

==========================
கவனமுடன் படிக்க வேண்டிய கால கட்டம், படிப்பில் மறதி உண்டாகும், ஆரம்ப கல்வி, தொழிற் கல்வி படிப்பவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டும், மதிப்பெண்கள் குறைவாக தான் கிட்டும், தேர்வு அறையில் கவனமுடன் இருக்க வேண்டும் இல்லையெனில் வீண் பழிக்கு ஆளாக நேரிடும்

பரிகாரம் :

ஹயத்கீரீவர், சரஸ்வதி வழிபாடு புதன்கிழமையில், சனீஸ்வரன் வழிபாடு சனிக்கிழமையில்

கலைஞர்கள் :

===============
மிகுந்த கவனமுடன் செயல்படவேண்டும், புதிய முயற்சிகள் தோல்வியை தழுவும், பல சங்கடத்தை சந்திக்கும் காலம், பண நெருக்கடி அதிகரிக்கும், கடன் தொகை கூடும், உங்கள் தயாரிப்பை அடுத்தவர்கள் சொந்தம் கொண்ட்டாடும் சூழல் உண்டாகும், வம்பு வழக்கில் மாட்டி கொள்வீர்கள்

பரிகாரம் :

பெருமாள் வழிபாடு ,சனீஸ்வரன் வழிபாடு
மேற்குறிப்பிட்ட பலன்கள் மற்ற கிரக பெயர்ச்சிகள், உங்கள் ஜனன ஜாதகத்தின் வலு மற்றும் தசா புத்திகள் பொருத்து மாற்றங்கள் உண்டாக்கும்.
எனவே அருகிலுள்ள ஜோதிடரை அல்லது என்னை கலந்து ஆலோசித்து முடிவகள் எடுப்பது சிறப்பை தரும்
நன்றி
வாழ்க வளநலமுடன்

0 comments:

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP